வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 25

 

மேலும் சில மாதங்கள் கடந்த நிலையில்:

அன்று நயனி சக்கரவர்த்தி குறித்து பேசியதில் அவள் வலியையும் வேதனையையும் மதித்து அதன் பின் எந்த கேள்வியும் கேட்காது அபய் அவள் முடிவை முழு மனதாக ஏற்றுக்கொண்டான்.

இந்த ஒரு மாதத்தில் சொன்ன சொல் தவறாதவனாக அபய் தன் வரையில் அவர்களின் உறவை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சி செய்தான். அதை கண்ட நயனிக்கே பெரும் ஆச்சர்யம்!!

பின்னே சஞ்சு அபய்யின் காதலை அருகில் இருந்து பார்த்தவள் அல்லவா?! அதனால் தன்னை தினமும் கல்லூரிக்கு அழைத்து செல்வது அவன் பொறுப்பு என்று அபய் சொன்னதில் வியக்காமல் என்ன செய்வாள்?!

அன்று காலை கல்லூரிக்கு கிளம்பி தயாராக இருந்தவளிடம் அபய் ஸ்ரீவத்ஸன் விஷயத்தை சொன்ன பிறகும் பதிலளிக்காமல் நின்றிருந்தவளிடம், "இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் நயனி? உனக்கு என்னோட வர விருப்பமா? இல்லை இன்னும் கோபமிருக்கா? எப்போ குறையும்?! ஏதாவது சொல்லு?" என்றான்.

"என்ன பாஸ் இது நீங்க வச்சா குடுமி சரைச்சா மொட்டைன்னு இருக்கீங்க?! இப்படி ஒரு சேன்ஜ் ஓவர் உங்க கிட்ட இருந்து இவ்ளோ சீக்கிரம் எதிர்பார்க்கலை... என்ன ஏதாவது காத்து கருப்பு அடிச்சுடுச்சா இல்லை சஞ்சு கனவுல வந்து என் ஃப்ரெண்டை ஒழுங்கா பார்த்துக்கணும்னு மிரட்டினாளா?"

"ஏன் இதை தவிர வேற காரணம் இருந்தா ஏத்துக்க மாட்டியா?"

"வேற காரணமா?! ஆர் யூ ஸீரியஸ் அபய்?"

"அஃப்கோர்ஸ்!!" என்றவனின் பதிலில் உண்டான ஆர்வத்தோடு,

அப்படி என்ன காரணம்? அதை நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றதும் சம்மதமாக தலையசைத்தவன், “மனுஷனை அழிக்க கூடிய மிகவும் வல்லமை பெற்ற ஆயுதம் எதுன்னு உனக்கு தெரியுமா நயனி?” என்றான்.

என்ன பாஸ் காலையிலயே பிலாஸஃபியா?”

உனக்கு கேள்வி புரிஞ்சது தானே?”

ஹ்ம்ம்!! 

அப்போ பதில் சொல்லு..             

நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம திரும்ப என்னையே கேட்கறீங்க?!” என்றாள் சிரிப்போடு.

"உன்னோட கேள்விக்கான பதிலை தான் இப்போ சொல்லிட்டு இருக்கேன். உனக்கு பதில் தெரியுமா தெரியாதா?"

"கோபமா?!"

"இல்லை அதை விடவும் வல்லமை பெற்றது.."

அகந்தை, பொறாமை இல்லை பேராசைஎன்றவள்எனக்கு ஐடியா இல்லை அபய்..

"மனுஷனோட மனசு!!"

"வாட்?"

ஆமா எப்படி இரும்பை அதனுடைய Rust (துரு பிடித்தல்) தவிர்த்து வேறு எதனாலும் அழிக்க முடியாதோ அதுபோல கஷ்டமான சூழல்ல இருந்து மீள முடியாம இருக்கிறவங்களை அழிக்க எக்ஸ்டர்னல் ஃபேக்டர்ஸ் எதுவும் தேவையில்லை அவங்களோட மனசு போதும்..

தினம் தினம் வேதனையை சுமந்து கழிவிரக்கம் கொண்டு அதிலேயே உழன்று கொண்டிருக்கும் மனங்கள் தான் விரைவில் மனிதனை அழிக்க கூடிய கூர்மையான ஆயுதம்! எப்போ அதிலிருந்து வெளி வரணும்னு நினைக்கிறாங்களோ அப்போ அவங்க தன்னோட அழிவை ஜெயிச்சுட்டாங்கன்னு அர்த்தம்..என்றவனின் பேச்சை ஆச்சர்யத்தோடு கேட்டிருந்தாள் நயனி.

உனக்கு நல்ல கணவனா இருக்கேன்னு வாக்கு கொடுத்திருக்கேன் நயனி. அதுக்கு முதல்ல நான் என்னை அந்த அழிவில் இருந்து மீட்டு எடுக்கணும்… எத்தனை பேர் சுத்தி இருந்தாலும் அதற்கான முயற்சியை நான் மட்டும் தான் எடுக்க முடியும்…

"நிஜமாவா?! எனக்காகவா?" என்றவளின் மனம் அத்தனை ஆர்பரித்தது.

ஆமா! உனக்காக தான். என்னோட பொறுப்பில் இருந்து நான் தவறினதால் நீ அனுபவிச்ச கஷ்டத்தை பார்த்ததில் இருந்தே என் மனசு ஒருநிலையில் இல்லை. என்னை அறியாமல் உன்னை தேட தொடங்கிட்டேன்… உடனே இதுக்கு பேர் காதல்னு நினைச்சுடாத..

அப்படி எல்லாம் நான் நினைக்கணும்னு உங்களுக்கு எண்ணம் வேற இருக்கா?” என்றாள் நமட்டு சிரிப்போடு.

ஒருநொடி திகைத்து விழித்தவன், “சமயம் கிடைக்கிறப்போ எல்லாம் காலை வாரி விட்டுடுற, உன் கிட்ட ரொம்பவே கேர்ஃபுல்லா பேசணும்..என்றான் சிரிப்போடு.


சரி உங்களையே அறியாமல் என்னை தேடினீங்க அடுத்து என்ன சொல்லுங்க..

சில நேரம் என்னை மறந்து நீ என்ன பண்ணிட்டு இருப்ப? சாப்ட்டியா இல்லையா? இவ்ளோ நடந்ததுல ஏதாவது தப்பான முடிவுக்கு வந்துடுவியா? யாராவது உன்னை ஹர்ட் பண்ணிடுவாங்களா? என்று உன்னை பற்றிய சிந்தனை தான்!!

அதேநேரம் என்னைக்கு இருந்தாலும் சஞ்சு திரும்ப கிடைச்சுடுவா அவளுக்கு துரோகம் செய்யக்கூடாதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு உன் நினைப்பை ஒதுக்க பார்ப்பேன், ஆனா என்னால முடியலை..."

"குற்ற உணர்ச்சியையும் மீறிய ஒரு உணர்வு! இந்த அவஸ்த்தையை தாள முடியாமல் தான் உன்னை தேடி வந்தேன்.. ஒருவேளை எல்லாரும் சொல்ற மாதிரி மஞ்சள் கயிறு மேஜிக்கோ என்னமோ தெரியாது ஆனால் நீ சுதர்ஷன் வீட்ல இருந்த போது என்னையும் அறியாமல் ஒருவிதமான உரிமை உணர்வு எனக்கு அதிகரிச்சது..."

உன்னை பக்கத்துல வச்சு பார்த்துக்க நினைச்சேன்… அப்படி உன்னை வீட்டுக்கு கூட்டிட்டும் வந்துட்டேன். ஆனா நீ குழந்தை பற்றி பேசிய போது தான் எனக்கு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னே புரிஞ்சது. என் வாழ்க்கையோடு சேர்த்து உன்னோட வாழ்க்கையையும் சிக்கலாக்குவது புரிந்தது..

ஸோ உன்னை விலகி போக சொன்னேன். பட் இப்போ நம் உறவை பலப்படுத்தும் முயற்சியில் நான் விலகி இருந்தா தப்பாகி போகும்.." என்றவனின் பேச்சில் மெய் மறந்து நின்றிருந்தாள் நயனிகா வர்ஷி.

"நயனி என்ன யோசனை?" என்று அபய் அவள் முன் சொடக்கிடவும் சிறு தலை குலுக்கலோடு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவள்,

நீங்க எவ்ளோ பொறுப்பானவர்னு சஞ்சு சொல்லி கேள்விபட்டிருக்கேன், காலேஜ்ல நடக்கிற ஒவ்வொரு ப்ரோக்ராம்லயும் தூரத்துல இருந்து பார்த்து வியந்திருக்கேன். பட் இப்போ பக்கத்துல இருந்து பார்க்கிறப்போ பேச்சு வரலை..என்றாள் புன்னகையோடு.

உன்னோட இன்டராகேட்டிவ் செஷன் (Interrogative session) முடிஞ்சதுன்னா இப்போ காலேஜ் கிளம்பலாமா?!” என்றவனுக்கு மகிழ்ச்சியோடு நயனி சம்மதிக்க அன்று முதல் தினமும் அவளை தன்னோடு கல்லூரிக்கு அழைத்து சென்று வீட்டிற்கு அவளோடு திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

அவனுக்கு முக்கிய வேலைகள், மீட்டிங் என்று இருக்கும் போது டிரைவரை கொண்டு அவளை வீட்டிற்கு அனுப்பி வைப்பான்.

அன்று முக்கிய வேலையாக அபய் ஸ்ரீவத்ஸன் வெளியில் சென்றிருக்க வீட்டிற்கு திரும்பிய நயனிகா நிர்மலா கொடுத்த காஃபியை பருகி விட்டு பேப்பர் திருத்தும் பணியில் அமர்ந்து விட்டாள்.

நேரம் போனதே தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விடைத்தாள்களை திருத்தி முடித்து நிமிர்கையில் அபய் ஸ்ரீவத்ஸன் அறையினுள் நுழைந்தான்.

"நீங்க சொன்னதை வச்சு நேரமாகும்னு நினைச்சேன் ஆனா இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?" என்றவளிடம் ஒரு பாக்ஸை நீட்டினான்.

"என்ன இது?"

"பிரிச்சு பார்..." என்றதும் பிரிக்க அதில் ஸ்வீட் கார்ன் இருந்தது.

ஆச்சர்யத்தோடு அபய் ஸ்ரீவத்ஸனை பார்க்க, "உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்கும் தானே?!" என்றான்.

"ஆமா, பட் உங்களுக்கு எப்படி தெரியும்? சஞ்சு சொல்லி இருக்காளா?"

"ஹ்ம்ம் அவளும் சொல்லி இருக்கா வெளியில போறப்போ நீ அதிகமாக விரும்பி சாப்பிடுவன்னு சொல்லி சஞ்சு உனக்காக வாங்குவதை பார்த்திருக்கேன்.. இன்னைக்கு ஸ்வீட்கார்ன் பார்க்கவும் உன் ஞாபகம் வந்தது, அதுதான் வாங்கிட்டு வந்தேன்.." என்றவன் அவளை பார்த்தபடி தயக்கத்தோடு நின்றிருந்தான்.

பாக்ஸை பிரித்தவள் அப்போது தான் அவன் அங்கேயே நிற்பதை கண்டு, "ஒஹ் ஐம் ஸாரி தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்... தேங்க்ஸ் அபய்" என்றிட அவனோஸாரி..என்றான்.

"ஸாரியா? எதுக்கு?"

"இல்லை இப்போ நான் வேணும்னு சஞ்சு பேர் எடுக்கலை பட் என்னையும் மீறி வந்துடுச்சு. அதுதான் ஐ'ம் ரியலி ஸாரி..." என்றான்.

ப்ச் அபய் எதுக்கு நீங்க இவ்ளோ கான்ஷியஸ் ஆகறீங்க?! நம்ம ரெண்டு பேரோட லைஃப்ல சஞ்சு ரொம்பவே முக்கியமான நபர். நாம சுவாசிக்கிற மூச்சு காற்று மாதிரி அவளோட நினைவுகள் நம்மோடு கலந்திருக்கு..

நாமளே அதை மறக்கவோ, தவிர்க்கவோ நினைச்சாலும் முடியாதது… அப்புறம் ஏன் நீங்க ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி ஸாரி சொல்றீங்க? உங்க ஸாரியால நீங்க சஞ்சுவை லவ் பண்ணினது இல்லைன்னு ஆகிடுமா இல்லை என்னைக்குமே அவ உங்க மனசை விட்டு நீங்க முடியாது என்பது மாறிடப்போகுதா?”

"அப்படி இல்லை இந்நேரத்துக்கு உன் இடத்துல வேற யாராவது இருந்தா என்னை விட அவ முக்கியமா? இன்னும் மறக்கலையான்னு கேட்டு சண்டை போடுவாங்க. ஆனா நீ எப்படி இவ்ளோ புரிதலோடு இருக்க? ரொம்ப ஈஸியா எடுத்துக்கிற?"

"அப்படின்னு யார் சொன்னா?!"

"இன்னைக்கு விஜயகுமாரை மீட் பண்ணேன்.. அன்னைக்கு ராஜன் விஷயத்துல மும்முரமா இருந்ததால எதையும் டீட்டெயிலா பேசிக்க முடியலை. இன்னைக்கு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்.. அப்போ அவன் தான் இப்படி சொன்னான்.."

"உங்க ஃப்ரெண்ட் சொன்னா ஆச்சா அபய்?! சஞ்சு இந்த உலகத்துலயே இல்லை.. அப்படியே இருந்திருந்தாலும்எனக்கு நீங்க உங்களுக்கு நான்என்று முடிவு செய்து நம்மளை சேர்த்து வச்ச பிறகு எனக்கு இன்செக்யூர் ஃபீல் வர விட்டிருக்க மாட்டா.."

"அவருக்கு எங்களையும் எங்க நட்போட ஆழமும் தெரியாது அதனால பேசி இருக்கலாம்.. பட் நீங்க ஏன் அதையெல்லாம் பெருசு படுத்துறீங்க?!"

"சஞ்சுவோட பேரை நமக்கு இடையில் எடுக்க கூடாதுன்னு நான் என்ன தடை உத்தரவா பிறப்பிச்சு இருக்கேன்? நான் ஹர்ட் ஆவேனோன்னு நீங்க இவ்ளோ தூரம் தயங்கவும், பயப்படவும் தேவையில்லை அபய்!"

"இதையே தான் நானும் விஜயகுமார் கிட்ட சொன்னேன்.." என்றான் புன்னகையோடு..

"ரியலி?!"

"ஆமா. நீ சொல்றதெல்லாம் மற்ற மனைவிகளுக்கு பொருந்தலாம் ஆனால் என்னோட நயனி வித்யாசமானவள்னு சொன்னேன்.."

"பார்றா! என்னோட நயனியா?! பாஸ் செம முன்னேற்றம் உங்க கிட்ட... இப்படியே இருந்தா நீங்க எங்கேயோ போயிடுவீங்க, ஆனா ஒரு நாளைக்கு ஒரு ஷாக் கொடுங்க போதும் நிறைய கொடுத்தா என் பாடி தாங்காது..." என்றிட உரக்க சிரித்து விட்டான் அபய்.

சிரிப்புடனே அபய் உடை மாற்ற செல்ல தனக்கான கணவனின் சிறு செய்கையில் உண்டான புன்னகையோடு சாப்பிட தொடங்கினாள்.

ஜீன்ஸ் டீஷர்ட்டில் மீண்டும் தயாராகி வந்தவன், "இன்னைக்கு உனக்கு ஏதாவது வொர்க் இருக்கா நயனி இல்லை நீ ஃப்ரீயா?" என்றான்.

"எஸ்! இப்போ தான் கரெக்ஷன் முடிச்சேன் பட் ஏன் கேட்கறீங்க?"

"இல்ல உனக்கு வேலை எதுவும் இல்லைன்னா நாம டின்னர் போகலாமா?" என்று அவளுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க ஸ்பூனை நழுவ விட்டது நயனியின் கரம்.

"என்ன சொன்னீங்க?!"

"டின்னர்க்கு வெளியே போகலாமான்னு கேட்டேன்.."

"கண்டிப்பா போகனுமா?!"

"நமக்கு கல்யாணமாகி இரண்டு வருஷத்துக்கு மேலாச்சு நயனி. இதுவரை தனியா எங்கேயும் போனதில்லை.."

"அதுதான் தினமும் காலேஜ்க்கு தனியா போய் வரோமே.." என்று அவள் கண் சிமிட்ட,

"வர வர உனக்கு சேட்டை அதிகமாகிடுச்சு..  முதல்முதலா புருஷன் சர்ப்ரைஸ் டின்னருக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் மற்ற பொண்ணுங்களா இருந்தா இந்நேரத்துக்கு எவ்ளோ எக்ஸைட்டாகி பரபரப்பா தயாராகி இருப்பாங்க..." என்றவன் முடிக்கும் முன்னமே,

"என்ன இதையும் உங்க ஃபிரெண்ட் விஜயகுமார் சொன்னாரா?!" என்றாள் சிரிப்போடு...

"ஆமா. உனக்கு எப்படி தெரியும்?!" என்றதில் நயனியின் சிரிப்பு இரட்டிப்பாகி போனது.

"ஆக மொத்ததுல இன்னைக்கு உருப்படியா எந்த வேலையும் செய்யாம காலேஜை கட் அடிச்சுட்டு உங்க ஃபிரெண்ட் கிட்ட என்னை கரெக்ட் பண்ண ஐடியா கேட்க போயிருக்கீங்க?! அப்படி தானே?!" என்று உரக்க சிரிக்க அபய்என்ன பதிலளிப்பது?’ என்று புரியாது திருதிருத்தான்.

உங்க முழியே சரியில்லையே.. அப்போ அதுதான் உண்மை போல? என்ன பாஸ் இது? என்னை கேட்டிருந்தா ஒரு நாலு ஸ்கொயர் நோட்லஎன்னை கரெக்ட் பண்றது எப்படின்னுநானே எழுதி கொடுத்திருப்பேனே இதுக்கு ஏன் ஒரு போலீஸ் ஆஃபிஸரை தொந்தரவு செய்யறீங்க?” என்று சிரிப்போடு கேட்க அபய் முகத்தில் அசடு வழிந்தது.

நிஜமாவே நான் டின்னர் கூப்பிட்டது உனக்கு சர்ப்ரைஸா இல்லையா நயனி?”

அபய் நான் என்ன 18, 19 வயசு பெண்ணா உடனே எக்ஸைட் ஆகறதுக்கு? 27 வயசு முடியப்போகுது எனக்கு. ஐ ஜஸ்ட் லிவ் இன் தி மொமென்ட்ஸ்!

சின்ன வயசுல நிறைய விஷயத்துக்கு ஏங்கி இருந்தாலும் வாழ்க்கை நமக்கு விதிச்சது இதுதான்னு அதிக சந்தோஷம், கோபம், அழுகைன்னு இல்லாம எல்லாத்தையும் நான் நியூட்ரலா எடுத்துக்கும் பக்குவத்துக்கு வந்துட்டேன்.."

என்ன நீ சன்யாசி மாதிரி பேசிட்டு இருக்க? சுதர்ஷன் வைஃப் கூட சர்ப்ரைஸ் எல்லாம் எதிர்பார்பாங்க ஆனா உனக்கு அந்த மாதிரி எல்லாம் கிடையாதா?”

இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்ல?! பொதுவாவே குழந்தைகளுக்கான சர்ப்ரைஸ் வீட்ல அப்பா அம்மா மூலமாக தானே தொடங்கும் எனக்கு அப்படி சர்ப்ரைஸ் கொடுக்க அப்பாவும் இல்லை அம்மா இருந்தும் செய்ய முடியாத நிலை!

மத்தவங்க பர்த்டேக்கு புது ட்ரெஸ் ஸ்வீட்ஸ், சாக்லெட்ஸ்னு கொண்டாடுறப்போ எனக்கு அதிகபட்சம் சில பிறந்த நாளுக்கு எங்கம்மா என் பேர்ல அர்ச்சனை பண்ணி வச்சு விடற விபூதி குங்குமம் மட்டும் தான்!"

"அது கூட சில வருஷம் கிடைக்காது. ஸோ காலப்போக்குல எதையும் எதிர்பார்க்கிறதை விட்டுட்டேன். அதையும் மீறி எனக்கு சர்ப்ரைஸ் பண்ற ஒரே ஜீவன் என்னோட சஞ்சு! இப்போ அவளும் இல்.." என்றவளுக்கு உணர்வின் மிகுதியில் தொண்டை அடைத்துக்கொண்டது.

"நயனி.."

"பாருங்க இப்பவும் நாம பேசும் போது சஞ்சு பற்றின பேச்சு நம்மை அறியாம வந்துடுது. அது தவிர்க்கவே முடியாதது. சஞ்சு இப்படியாவது நம்மோடு இருக்கட்டுமே ஒன்னும் தப்பில்லை. ஏன் அதை கட்டுபடுத்தனும்?" என்று கண்ணீரை துடைத்தவள்,

"ப்ச் விடுங்க அபய், இப்போ எதுக்கு இதெல்லாம்?! இது தான் லைஃப்! என்னோட லைஃப் எப்படி இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்"

"நயனி ப்ளீஸ் உன்னோட பேச்சு சாதாரணமா தெரியலை. எப்படி இருக்கும்னு சொல்ற?" என்று புரியாமல் அவளை பார்த்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.

"எப்படியும் நீங்க என்னை டிவோர்ஸ் பண்ண போறதில்லை, இன்னொரு கல்யாணமும் பண்ணிக்க போறதில்லை.. கடைசி வரை நாம தான் புருஷன் பொண்டாட்டி, இதுல புதுசா நான் எக்ஸைட்டாக என்ன இருக்கு?" என்றதில் அவனுக்கு மனம் முள்ளாக குத்தியது.

ஏன் நயனி இவ்ளோ விரக்தியா பேசுற? எந்த வயசா இருந்தா என்ன? என்னோட வைஃப்பை ஹாப்பியா வச்சுக்க நினைக்கிறேன். நான் உனக்காக செய்யற விஷயம் உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும் உன்னை சந்தோஷப்படுத்தனும்னு நினைக்கிறேன் இது தப்பா?”

ப்ளீஸ் நான் உன்கிட்ட நடந்துகிட்ட விதத்தை வச்சு நீயா ஒரு முடிவுக்கு வந்துடாத. நீ தான் என்னோட நிகழ்காலமும், எதிர்காலமும்! அதுல மாற்று கருத்து இல்லை. அதற்காக சஞ்சு வார்த்தையை வச்சு கடமையா ஒரு வாழ்க்கை வாழ நான் நினைக்கலை.. அது உனக்கு புரியுதா? ஏன் உன்னை நான் டின்னர் கூட்டிட்டு போக கூடாதா?!” என்றான் ஆற்றாமையோடு.

"அச்சோ நான் அப்படி சொல்லலை அபய். பட் டின்னர் கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு சர்ப்ரைஸ் ஆகலையா? உடனே எக்ஸைட்டாகி குதிக்கலையான்னு கேட்டா நான் என்ன சொல்ல?! ம் நாட் தட் கைன்ட்னு சொல்றேன், அவ்ளோதான்!!"

"ஹப்பா உன்னோடு கொஞ்ச நேரம் சேர்ந்த மாதிரி பேச முடியுதா? இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.., ஆனா நீ சிறந்த பேச்சாளர்னு அடிக்கடி நிரூபிக்கிற..." என்றான் சிரிப்போடு.

அதில் நயனி முகத்திலும் இத்தனை நேரம் இருந்த இறுக்கம், வேதனை மறைந்து புன்னகை உதயமாகியது.

இப்போவாவது டின்னர் போகலாமா?" என்றவனுக்கு புன்னகையோடு தலையசைத்தவள் உடை எடுக்க செல்ல அவள் பின்னே வந்த அபய், “என்ன போட போற?” என்று மனைவி பின்னே நின்றபடி அவள் வார்ட்ரோபை பார்வையிட்டான். 

நீங்க சூஸ் பண்ண போறீங்களா?” 

பண்ண கூடாதா?”

ஏன் இல்லாமல், கேரி ஆன்!என்றவள் கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்று கணவனை பார்த்திருந்தாள்.

உன் கிட்ட ஜீன்ஸ் இல்லையா நயனி..

இருக்கே! செகேன்ட் ரோல பாருங்க..என்றதும் கருப்பு ஜீன்ஸ் அதற்கு பொருத்தமான டாப்ஸ் எடுத்து கொடுக்க மாற்றி கொண்டு கண்ணாடி முன் நின்றவள் நேரமெடுத்து அலங்கரித்து கொண்டு கணவனோடு கிளம்பினாள்.

 

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1