வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 11.2

 


 

கணவன் தன் பேச்சை கவனிக்கவும், “ஃபர்ஸ்ட் எனக்கு காலையில தனியா எல்லா வேலையும் செய்ய முடியல. அதுக்கு ஹெல்ப்புக்கு ஒருத்தர் தேவை. அது நீங்களாவும் இருக்கலாம் இல்ல அத்தையாகவும் இருக்கலாம். அது உங்க விருப்பம். நிச்சயமா நான் சிந்துவை சொல்லலை..” என்று முன்னேற்பாடாக சொல்லிவிட்டாள்.

“என்னடி நினைச்சுட்டு இருக்கிற உன் மனசுல? என்னால காலையில சீக்கிரமா எந்திரிக்க முடியாதுன்னு தெரியாதா? அம்மாவும்..” என்று அடிக்குரலில் சீறியவனை இடையிட்டு, 

“ஒரு ஆளா இருக்கிற உங்களாலேயே முடியாத போது மூணு ஆளா இருக்கிற என்னால எப்படி முடியும்னு கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க ரிஷி.. உங்களால முடியாதுன்னா அத்தையை எனக்கு ஹெல்ப் பண்ண சொல்லுங்க..”

“அதுதான் ஃபிசியோதெரபிஸ்ட் அஞ்சு மாசத்துக்கு மேல ஆகிட்டதால கை கால்களுக்கு நல்லா அசைவு கொடுக்க சொன்னாங்களே., இனி ரொட்டீன் வொர்க்கு திரும்பலாம் வெயிட் மட்டும் தூக்க வேண்டாம் சொல்லிட்டாங்களே.. அதனால அத்தை கிட்ட நீங்களே பேசுங்க..”

“அவங்க எனக்கு பெருசா உதவாட்டியும் பரவால்ல காய்கறி கட் பண்ணி கொடுத்தா கூட போதும் நிச்சயம் அது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்..” 

“அப்போ உன்னோட தலை சுத்தல் வாமிட்..” என்று அவன் கேள்வியாய் பார்க்க, 

“அதுதான் டாக்டர் டேப்லெட் கொடுத்து இருக்காங்களே, அது ஓரளவுக்கு கை கொடுக்குது. பட் தலைசுற்றல் இருக்கு அதுக்கும் வேற ஏதாவது ஆல்டர்னேட் பார்க்கணும். என்னோடு வொர்க் பண்ற மிதுன் இங்க இருந்து தான் மெட்ரோ எடுக்கிறார்..”

“அவரை இனிமேல் என்னோடு ஜாயின் பண்ணிக்க சொல்லி கேட்கணும். ரெண்டு பேரும் ஒண்ணா போகும் போது ஏதாவது அசம்பாவிதம் இருந்தாலும் பக்கத்துல இருக்கிறவர் பார்த்துப்பார்.. எனக்கு இந்த ஒரு வழி தான் தெரிஞ்சது. உங்களுக்கு எதாவது தெரிஞ்சா சொல்லுங்க மாத்திக்கலாம்” என்று கேட்க அவனிடம் பதிலில்லை.

“அடுத்து பாத்திரம் கழுவ வீடு துடைக்க கண்டிப்பா ஆள் போட்டு தான் ஆகணும்..” என்றவளின் குரலில் அத்தனை தீவிரம்.

ரிஷி ஏதோ பேச வர “ஒரு நிமிஷம் நான் பேசி முடிச்சுடுறேன்..” என்றவள்,

“பாத்திரம் கழுவறப்போ வயிறு சிங்க் முனையில இடிக்க ஆரம்பிச்சிடுச்சு ரிஷி, இன்ஃபாக்ட் சமையல் மேடையில் ஒவ்வொரு முறை வயிறு உரசும் போதும் எனக்கு வலிக்குது.. அதைவிட எங்க காலையில கிளம்புற அவசரத்துல இடிச்சுப்பேனோன்னு பயமா இருக்கு..”

“சுவர் இருந்தா தாங்க சித்திரம் வரைய முடியும். சம்பாதிச்சு கொடுக்க நான் இருந்தா தான் உங்களுக்கு அந்த பணமே வந்து சேரும். ஆனால் போற போக்கை பார்த்தா எங்க நான் மொத்தமா படுத்துடுவேனோன்னு பயமா இருக்கு..”

“எந்த ப்ராப்லமும் சின்னதா இருக்கும் போது அதுக்கான சொல்யூஷன் ஈசியா இருக்கும் அதையே வளர விட்டோம்னா சால்வ் பண்றது ரொம்ப கஷ்டம்.. இதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல..”

“குழந்தைகள் வளரவும் எனக்கு தூங்குற நேரம் குறையுது, சீக்கிரமா எந்திரக்க முடியறதில்லை. அதை தொடர்ந்து வாமிட்.. இத்தனைக்கும் என்னோட அண்ணிகள் இரண்டு பேரும் வாந்தி எடுத்து நான் பார்த்தது கிடையாது லேசா தலை சுற்றல் மட்டும் அப்பப்போ இருந்ததுன்னு சுமதி அண்ணி சொல்லி இருக்காங்க. ஏழு மாசத்துல தான் வயிறே தெரிஞ்சது அதுவரைக்கும் அவங்க கர்ப்பமாக இருக்காங்கன்னு யாருக்கும் தெரியாது..”

“அந்த அளவு அவங்களோட பிரக்னன்சி பீரியட் ரொம்ப ஹாப்பியா, நார்மலா இருந்தது என்னோடதும் அப்படித்தான் இருக்கும்னு  நினைச்சு அன்னைக்கு சம்மதம் சொன்னேன் ஆனா இப்படி ஆகும்னு நான் மட்டும் எதிர்பார்த்தேனா என்ன?!..”

எனக்கு மட்டும் ஏன் இப்படி? காலையில பிரஷ் பண்ணும் போது கூட வாமிட் வருது டயர்ட் ஆகிடுறேன்.. அதோடவே சமைச்சு கொடுத்து வேலைக்கு போய்ன்னு என்னால எவ்வளவுதான் பார்க்க முடியும்? நானும் மனுஷி தான். காலையில ஆபீஸ்க்கு கிளம்புற அவசரத்துல ஒரு பக்கம் பாத்திரத்தை வாஷ் பண்ணிட்டு இன்னொரு பக்கம் உலை வெச்சிட்டு என்னால இனியும் அல்லாட முடியாது... 

எப்படியும் அத்தை வீட்டுக்கு உள்ள வேலையாட்களை விட மாட்டாங்க அதனால  பாத்திரத்தை எல்லாம் வெளியே வரண்டால வச்சுட்டா வரவங்க அங்கேயே வாஷ் பண்ணிட்டு போயிடுவாங்க.. பிராப்ளம் சால்வ்ட்..”

“அதோடு சிந்து இன்னர்ஸ் இனி நான் தொவச்சு கொடுக்க முடியாது..” என்றதில் கண்களை மூடித்திறந்த ரிஷி.,

“நீயாடி செய்ற, வாஷிங் மெஷின் தானே?!” என்றான் அடிக்குரலில்.

“வாஷிங் மெஷினாவே இருந்தாலும் அவ இன்னர்ஸ் கூட கையில வாஷ் பண்ணாம சில நேரம் அதுல போட்டு வச்சுடுறா, அப்படி செய்யக்கூடாதுன்னு சொன்னாலும் படிக்கிற வேலை இருக்கு அடுத்த முறை கையில வாஷ் பண்றேன்னு சொல்லிட்டு போறா..”

“அதனால அதை துவைக்கவும் வர ஆள் கிட்டயே சொல்லிடுங்க மிஷின்ல போடக்கூடாது..”

“அப்போ வீடு யாருடி துடைப்பா?”

“அது நீங்க டிசைட் பண்ணுங்க எப்படியும் வெளி ஆட்கள் வீட்டுக்குள்ள வரக்கூடாது ஸோ நீங்க துடைக்கிறதா இருந்தாலும் சரி இல்ல..” என்றவள் வாக்கியத்தை முடிக்கும் முன்,

“அப்போ என் அப்பாவை செய்ய சொல்லுவியா?” 

“நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை மாமா எப்பவுமே எனக்கு ஹெல்ப் பண்ண தயாரா தான் இருக்காரு நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்…”

“பிரசவத்துக்கு அப்புறம் எப்படி இருந்தாலும் எனக்கு பதிலா இன்னொரு சப்ஸ்டிடியூட் நீங்க பார்த்து தானே ஆகணும் அது இப்பவே செய்யுங்கன்னு சொல்றேன்..”

“ஸோ தட் எனக்கும் டென்ஷன் இல்லாம இருக்கும் நான் ஃப்ரீயா ரிலாக்ஸ்டா ஆபிஸ் போய் வருவேன் பேப்பர் போட வேண்டிய அவசியம் இருக்காது…” 

“ஏய் நிறுத்துடி! என்ன உன் இஷ்டத்துக்கு அடுக்கிக்கிட்டே போற?! இதுக்கெல்லாம் காசு யார் உன் அப்பனா கொடுப்பான்?” என்றவனின் பேச்சில் அதிர்ந்தவள், 

“என்ன லேங்க்வேஜ் ரிஷி இது.. பிரச்சனை நமக்குள்ள அதுல எதுக்காக அப்பாவை இழுத்து பேசறீங்க? அதுவும் அப்பாவை இப்படியா மரியாதை இல்லாம பேசுவீங்க?” என்றாள் அதிர்வும் அதிருப்தியுமாக.

“வேற எப்படி பேச சொல்ற? நான் என்ன செய்யணும்னு நான் தான் முடிவு பண்ணனும் ஆனா நீ எனக்கு கட்டளை போடுவியா? வேலைக்கு வர ஆளுங்களுக்கு யார் பணம் கொடுப்பா?”

“என்ன ரிஷி பேசறீங்க? நம்ம ரெண்டு பேரோட சம்பாத்தியத்துக்கு வேலைக்கு மட்டும் இல்ல சமையலுக்கு கூட ஆள் போடலாம்…”

“அப்படியே இருந்தாலும் அதை நான் முடிவு பண்ணனும். நீ யார்டி முடிவு பண்ண?”

“ரிஷி!!”

“வாயை மூடுடி! இந்த அதிகாரத்தை எல்லாம் உன் அப்பன் வீட்டுல வச்சுக்கோ இங்க என்னை அதிகாரம் பண்ற வேலை இருக்க கூடாது..” என்றவனின் குரலில் அதிர்ந்து போனாள் மகா. 

“ரிஷி நம்ம பிரச்சனைக்கான சல்யூஷன் தானே சொல்றேன்.. அதுக்கு ஏன் கோபப்படறீங்க?”

“வெளியே தான் ஆயிரத்தெட்டு பிரச்சனைனா வீட்டுக்கு வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையா? பேசாம வேலையை விட்டுட்டு உனக்கு முறை வாசல் செய்யட்டுமா?..” என்றான் உரத்த குரலில்.

“ரிஷி என்ன பேசறீங்க? எதுக்கு இவ்ளோ கோபம்?

ஏய், வீடு கூட்டி பாத்திரம் கழுவுறது இப்போ ரொம்ப முக்கியமா? கொஞ்ச நேரமாவது மனுஷனை நிம்மதியா விடுடி

“ஏன் இவ்ளோ டென்ஷன்” என்றவள் ஒருவேளை ஆபிஸ் பிரச்னையோ என்று நினைத்து, ரிஷி எப்பவுமே  நீங்க பிரச்சனையை ரொம்ப பக்கம் வச்சு பார்க்கறீங்க அதுதான் பூதாகரமா தெரியுது.. கொஞ்சம் தள்ளி வச்சு பாருங்க ரொம்ப சின்னதா தெரியும்..” என்றாள்.

“உன் அட்வைஸ் இப்போ கேட்டேனா நான்?” என்று அதற்கும் சீறினான்.

“ரிஷி..” என்றவளுக்கு அவன் கோபம் எதனால் என்று சுத்தமாக புரியவில்லை. 

“இன்னும் எதுக்கு நின்னுட்டு இருக்கிற? என்ன தான்டி வேணும் உனக்கு? சும்மா நசநசன்னு பேசாம என்னை கொஞ்ச நேரம் தனியா விடறியா?” என்றான் நெற்றியை பிடித்துகொண்டு.

அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாதவள் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவனுக்கு காஃபி கொண்டு வந்தாள்.

“ரிஷி நான் எதுவும் பேசலை. காஃபி எடுத்துக்கோங்க..” என்று வைத்துவிட்டு செல்ல, “ரிஷி சாப்பிட வரலையா மா?..” என்றார் சிவபாலன்.

“இல்லை மாமா, அவர் கொஞ்சம் டென்ஷனா இருக்கார்.. அதுதான் காஃபி கொடுத்துட்டு வந்தேன்..” என்று சொல்ல சிவபாலன் முகத்தில் வேதனை.

“நீங்களே சொல்லுங்க மாமா என் மேல எந்த தப்பும் இல்லாதப்போ நான் எதுக்கு ஸாரி கேட்கணும்? நேத்தே அந்த பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சேன் ஆனா இன்னும் அவர் அதை மனசுல வச்சுட்டு பேசறார், நான் சொல்றதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார். நான் என்ன செய்யட்டும்?”

“லட்சுமி அவனுக்கு அதனால உன் மேல கோபம் இருக்காது..”

“வேற என்ன மாமா? உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்க அவரால் மகள் பேசிய பேச்சுக்களையும் நடந்து கொண்ட விதத்தையும் எப்படி மருமகளிடம் சொல்ல முடியும்?!

“இல்லைம்மா, எதாவது ஆஃபிஸ் டென்ஷனா இருக்கும். என்கிட்டயும் சரியா பேசலை, அதுக்காக அப்படியே விட்டுடாத லட்சுமி எப்படியாவது சாப்பிட வை..” என்றவர் மாத்திரை போட்டுக்கொண்டு வெளியில் சென்றார். 

மேலும் அரை மணி நேரம் கடக்க சமையல் பாத்திரங்களை கழுவி வைத்து சமையலறையை சுத்தபடுத்தியவள் மீண்டும் அறைக்கு சென்றாள்.

அங்கே அவள் வைத்துவிட்டு போன காஃபி ஏடு கட்டி போயிருந்தது. 

அவள் அறையில் இருந்து செல்லும் போது இருந்த அதே நிலையில் படுத்திருந்த ரிஷி இன்னும் உறங்கவில்லை. 

“என்னங்க சாப்பிட வாங்க நேரமாச்சு.. சாப்பாடு சூடு பண்ணி இருக்கேன்..” என்றாள்.

“இப்போ அது ஒன்னு தான் குறைச்சல். உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதாடி. போய் தொலை இங்கிருந்து..” என்று சப்தமாக இறைந்ததில் தூக்கிவாரிப்போட்டது மகாலட்சுமிக்கு.

அவன் அப்படி கத்துவான் என்று எதிர்பார்க்காத மகாவிற்கு இருதய துடிப்பு ஏகத்திற்கும் எகிறியது. 

நெஞ்சில் கை வைத்தபடி கணவனை பார்த்திருந்தவள் விழிகளில் நீர்ப்படலம். 

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3