வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - முன்னோட்டம் 6

 


தினகரன் பாக்கியலட்சுமி கிளம்பிட “என்னம்மா தாத்தா பாட்டி மட்டும் கிளம்பிட்டாங்க.. அப்போ நாம கோவிலுக்கு போக போறதில்லையா?” என்றான் சுமதியின் மகன். 

“இன்னைக்கு நாம எல்லாரும் அத்தை பர்த்டேவை செலிபரேட் பண்ண கோவில், பீச், ஹோட்டல்னு போய் என்ஜாய் பண்ண போறதா தானே ம்மா சொன்னீங்க.. எப்போ போக போறோம்?” என்றாள் மகள். 

“சித்தியை கூட்டிட்டு வர போயிருக்க தாத்தா, பாட்டி, சித்தப்பா வந்ததும் போகலாம்..” என்று குழந்தைகளை சமாதானப்படுத்த முயன்றாள்.

“அண்ணி ரெண்டு நாளா ப்ளான் பண்ணி இன்னைக்கு இல்லைன்னு சொன்னா குழந்தைங்க என்ன செய்வாங்க? எனக்கும் மனசே சரியில்லை இவங்களை கூட்டிட்டு கோவிலுக்காவது போயிட்டு வரேன்..” என்றாள் மகாலட்சுமி.

“நீ மட்டும் தனியா நாலு பேரையும் எப்படி சமாளிப்ப? இரு அத்தைக்கு சொல்லிட்டு நானும் வரேன்..” என்றிட மகாலட்சுமி கேப் புக் செய்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் கோவிலுக்கு செல்ல மகாவின் பெயரில் அர்ச்சனை செய்தார் சுமதி. 

“தம்பி போயிருக்காங்க மகா நிச்சயம் காயத்ரியை கூட்டிட்டு வருவார் நீ கவலைபடாத..” என்றாள் மகாவின் முகத்தில் இருந்த வேதனையை கண்டு. 

“ப்ச், ஏன் அண்ணி எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” என்றவளின் கையில் இருந்த கௌஷி மற்ற குழந்தைகள் பிரகாரத்தில் விளையாடிக்கொண்டு இருப்பதை கண்டு  அவளிடம் இருந்து திமிறிக்கொண்டு இறங்கினாள்.

“செல்லம் கால் சுடும்..” என்றிட “நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம் அத்தை..” என்று குழந்தைகள் அவளையும் கௌரவையும் அழைத்து சென்றனர். 

இருவரும் பேசிக்கொண்டு இருக்க அங்கே சுமதியின் தோழி வந்து சேர்ந்தாள். 

“நீங்க பேசிட்டு இருங்க அண்ணி நான் குழந்தைகளை பார்க்கிறேன்..” என்று குழந்தைகளை தேடி மறுபுறம் சென்றவள் அங்கே ரிஷி இரு குழந்தைகளையும் கையில் தூக்கி கொஞ்சி கொண்டு இருப்பதை கண்டவள் அதிர்ந்து போனாள்.

வேகமாக அவனருகே சென்று குழந்தைகளை பிடுங்கியவள், “என்ன தைரியம் இருந்தா என் குழந்தைகளை தொடுவ?” என்றவள் அவர்கள் இருவரையும் மற்ற குழந்தைகளிடம் கொடுத்து, 

“இவங்களை பார்த்துக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்றாள்.

“நாங்க தான் அத்தை விளையாட வச்சுட்டு இருந்தோம் மாமா வந்ததும் தான் அவர் கிட்ட கொடுத்துட்டு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போனோம்..”

“உங்க கிட்ட கொடுத்த பொறுப்பை ஒழுங்கா செய்ய தெரியாதா?”

“என் மேல இருக்கிற கோபத்தை எதுக்காக லச்சு குழந்தைகள் மேல காட்டுற?” என்றான் ரிஷி தன்மையாக. 

“ஷட் அப்!!” என்று ஆவேசத்தோடு அவனை பார்த்தவள், “இங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க.. பாப்பாவை கூட்டிட்டு அம்மா கிட்ட போங்க” என்றாள் அண்ணன் பிள்ளைகளிடம். 

சொன்னதோடு அல்லாமல் குழந்தைகள் பின்னே செல்ல முயன்றவளை “லச்சு!!” என்றவனின் குரல் தடுத்தது.

“ஐ சே ஷட் அப்!! இன்னொரு முறை என் பேரை சொன்ன நடக்கிறதே வேற..” என்றவளின் மனம் ஆர்பரிக்க, “ஹாப்பி பர்த்டே லச்சு!!” என்ற ரிஷியின் வாழ்த்து அவளின் கோபத்தை இன்னுமே கிளறிவிட்டது. 

“டேய் ஒருமுறை சொன்னா உனக்கெல்லாம் புரியாதா? எப்படிடா? எப்படி? எதுவுமே நடக்காத மாதிரி ஹாப்பி பர்த்டே சொல்ல முடியுது? கொஞ்சமும் உனக்கு வெட்கமா இல்லையா?!” என்றவளுக்கு அவனை பார்க்க கூட பிடிக்காததால் மீண்டும் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

ஆனால் ரிஷிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாததில் “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு லச்சு..” என்று சட்டென மகாவின் கையை பிடித்ததும் தான் தாமதம் கண்ணிமைக்கும் நொடியில் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

தீயாய் எரிந்த கன்னத்தை பிடித்துக்கொண்டு அதிர்வோடு ரிஷி நிற்க, “என்ன கேட்கணும்? இனி நீ சொல்லி நான் கேட்க எதுவுமே இல்லை. இத்தனை வருஷமா ஒருத்தி இருக்காளா இல்லையான்னு கூட பார்க்காத நீயெல்லாம் மனுஷனே இல்லை..”

“உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருதுடா, இன்னொரு முறை என் கண்ணு முன்னாடி வந்துடாத.. அதைவிட என் பசங்க மேல உன் மூச்சு காத்து பட்டது நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”

“லச்சு ப்ளீஸ்..” என்று ரிஷி மீண்டும் அவள் முன்னே வந்து நிற்க, 

“என்ன உன்னோட வீடு கடனில் மூழ்க போகுதா? அதனால தானே என்னை தேடி வந்திருக்க? அப்படி தானே! ப்ச், இல்லைன்னா உனக்கெல்லாம் என்னோட நியாபகம் எப்படி வந்திருக்கும்?”

“நான் என்ன பணம் காய்ச்சி மரமா? எந்தளவு என்னை நீ ஈஸியா எடை போட்டிருக்க.. இனியும் உன்னை நம்பியிருக்க, உனக்காக எதையும் இழக்க நான் முட்டாள் இல்லை, போடா!!” என்று அவனை தாண்டி சென்றாள் மகாலட்சுமி.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17