தீராத காதல் தொல்லையோ - 4.2
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை. “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு. “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை. “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான். “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

நம்மளால நம்ம நினைச்ச மாதிரி சந்தோசமான தருணங்கள கதைல தான் உருவாக்க முடியும். உங்க கதைல கூட உண்மையானவங்களுக்கு தான் தோல்வி .உங்க ஹீரோயின் ரொம்ப வீக் , உங்க ஹீரோ romba நல்லவன்,உங்க வில்லன் சைக்கோ . உண்மை கதைனா கூட நம்ம அழகான முடிவா குடுத்துயிருந்திருக்கலாம் ஏன்ன, throughout the story you put so much trauma only for this kind of ending ?Sorry for the comment.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis story has got 2 parts. "காணுகின்ற காதல் என்னிடம்" இரண்டாம் பாகம் பிரதிலிபியில் பதிவிடப்படும் வாசித்து விட்டு சொல்லுங்கள்.
DeleteThank you for your reply
Delete